பாக்கியலட்சுமி சீரியலில், இனியா அவரது அப்பாவிடம் போய் சேர்ந்துவிட்டது போல் சீரியல் கதை நகர்கிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியா உங்க பேரன்ட்ஸ் கண்டிப்பா ஸ்கூலுக்கு வரணும், இல்லை என்றால் உனக்கு TC கொடுத்துவிடுவேன் என்று HM வார்னிங் கொடுக்க, இனியா செய்வது அறியாமல் தவித்து கொண்டிருந்தார். அப்போது அவர் தோழி, ஏன் உங்க வீட்டில் இருந்து யாரும் வரவில்லை, ஆபிஸ் ரூமில் போன் இருக்கிறது, போய் கால் செய்து உங்க வீட்டில் இருந்து யாரையாவது வர சொல் என்று ஐடியா கொடுக்கின்றனர். இதையடுத்து இனியா அவரது அப்பாவிற்கு கால் செய்து நடந்ததை சொல்ல, கோபி ஸ்கூலுக்கு விரைந்து வருகிறார்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
அடுத்து அவரும், இனியாவும் HM-ஐ பார்க்க செல்கின்றனர். அப்போது அவர் இனியாவை பயங்கரமாக திட்டுகிறார், ஸ்கூலுக்கு போன் எல்லாம் கொண்டு வர கூடாது. இதுதான் உனக்கு கடைசி வார்னிங் என்று HM சொல்ல, கோபியும் இனியாவும் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர். இதையடுத்து அப்பா தனக்காக ஸ்கூலுக்கு வந்ததையடுத்து இனியாவுக்கு அவர் மீது கோபம் குறைந்துள்ளது.
மறுபுறம் பாக்கியா அமிர்தாவுக்கு போன் செய்து. உனக்கும் எழிலுக்கும் கல்யாணம் நடக்கும் நீ கவலை படாதே என்று ஆறுதல் கூறுகிறார். மேலும் செல்வி, பாக்கியா, ஜெனி மூவரும் குழந்தை பற்றி பேசிக்கொண்டிருந்தார். இந்த சமயம் இனியா தோழியின் அம்மா, பாக்கியாவிற்கு கால் செய்து ஏன் நீங்க ஸ்கூலுக்கு வரவில்லை என்று கேட்டுவிட்டு, நடந்ததை சொல்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி ஆன பாக்கியா வேகமாக ஸ்கூலுக்கு செல்ல, அங்கு கோபி இனியாவிற்காக வந்த விஷயம் பாக்யாவுக்கு தெரிந்துவிட்டது. இதை கேட்டு அவர் ஷாக் ஆகிவிட்டர், இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.