வீட்டை விட்டு வெளியே போகும் கோபி, பணத்தினை கொடுக்கும் பாக்கியா – அடுத்து வரும் ட்விஸ்ட்!

0
வீட்டை விட்டு வெளியே போகும் கோபி, பணத்தினை கொடுக்கும் பாக்கியா - அடுத்து வரும் ட்விஸ்ட்!
வீட்டை விட்டு வெளியே போகும் கோபி, பணத்தினை கொடுக்கும் பாக்கியா - அடுத்து வரும் ட்விஸ்ட்!
வீட்டை விட்டு வெளியே போகும் கோபி, பணத்தினை கொடுக்கும் பாக்கியா – அடுத்து வரும் ட்விஸ்ட்!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பாக்கியலக்ஷ்மி சீரியலில் தற்போது அதிரடியான பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் டி.ஆர்.பியில் கலக்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் கடந்த சில வாரமாக சீரியலில் எதிர்பார்க்காத திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. கோபி பற்றிய உண்மை எல்லோருக்கும் தெரியவந்து உள்ளது. இதனால் பாக்கியா கோபியை பிரிய முடிவு செய்த நிலையில் கோர்ட்டில் விவாகரத்து கிடைத்துவிடுகிறது. அதனால் கடும் கோபத்தில் இருக்கும் கோபி பாக்கியாவை இனிமேல் வீட்டிற்குள் வரக்கூடாது என சொல்கிறார். இந்நிலையில் பாக்கியா இனியாவிடம் உனக்கு அப்பா வேணுமா அம்மா வேணுமா யாருடன் இருக்க ஆசைப்படுற என கேட்க? என்னம்மா இப்படி எல்லாம் கேட்கிற என இனியா அதிர்ச்சியடைகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதைக் கேட்க கஷ்டமாகத்தான் இருக்கும், ஆனால் கேட்டாகத் தான் வேண்டும். அப்படி ஒரு சூழ்நிலையில் என்ன கொண்டு வந்து நிறுத்திட்டாங்க எனக்கு வேற வழி தெரியல என கூறுகிறார். நீ என் கூட தான் இருக்கணும்னு சொல்ல மாட்டேன். என் கூட இருக்கணும்னு எனக்கும் ஆசை இருக்கு ஆனால் உன்னுடைய விருப்பம் தான் கடைசி முடிவு. நீ உன் அப்பாவோட இருக்க ஆசைப்பட்டாலும் அதற்கு நான் எதுவும் சொல்ல மாட்டேன். ஏற்றுக்கொள்வேன். அதற்காக நான் என்னுடைய அம்மா என்ற கடமையிலிருந்து ஒருபோதும் தவற மாட்டேன் என கூறுகிறார். ஈஸ்வரி போதும் நிறுத்து பாக்கியா இப்படி சின்ன குழந்தை கிட்ட கேட்டா அவ மனசு என்ன கஷ்டப்படும். இது அவ மனசுல ஆறாத வடுவாக மாறிடும். நான் இந்த வீட்டில எல்லோரும் ஒண்ணா இருக்கணும் தான் இதுவரைக்கும் பேசிக்கிட்டு இருக்கேன் என கூறுகிறார்.

மேலும் குடும்பத்தில் உள்ள அனைவரும் பாக்கியாவை இந்த வீட்டில் இருக்க சொல்கின்றனர். இதற்கிடையில் கோபி என்ன எல்லாரும் பாக்கியா கிட்ட கெஞ்சிகிட்டு இருக்கீங்க, அவளை வீட்டை விட்டு வெளியே போக சொல்லுங்க என கூறுகிறார். இதையடுத்து கோபி, பாக்கியாவை வெளியே தள்ளி விடுகிறார். அப்போது அவர் கையில் வைத்திருந்த பெட்டி கீழே விழுந்து விட்டது. அப்போது அந்த பெட்டியில், கோபியின் துணிகள் இருந்தது. இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பாக்கியா இந்த வீட்டை விட்டு நான் போகமாட்டேன் என்று கூறிவிட்டார். அதற்கு கோபி அப்போ நான் வீட்டை விட்டு வெளியே போகவா என கேட்க, அதற்கு கோபியின் அப்பா ஆமா, நீ வெளிய போ என்று சொல்லிவிடுகிறார். மேலும் கோபி, இந்த வீடு நான் கட்டுனது, 40 லட்சம் ரூபாய் வேணும்னு சொல்கிறார். இதற்கு பாக்கியா, நான் அந்த பணத்தை கொடுத்து விடுகிறேன் என சொல்ல அத்துடன் இன்றைய எபிசோட் முடிந்துவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here