சமீபத்தில் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா மலேசியா சென்ற போது ரசிகர்கள் ஆதரவு கொடுத்த நிலையில் இது குறித்து அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தொகுப்பாளினி பிரியங்கா:
விஜய் தொலைக்காட்சியில் தலைசிறந்த ஆங்கராக வலம் வருபவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா. தற்போது மகாபா ஆனந்துடன் இணைந்து “ஊ சொல்றியா ஊஊ சொல்றியா” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவர்கள் சேர்ந்து தொகுத்து வழங்கிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எந்த அளவுக்கு ரீச் ஆனதோ அதே போல் “ஊ சொல்றியா ஊஊ சொல்றியா” நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளது. இதனை தொடர்ந்து திரும்பவும் சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்கள்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த பிஸியான நேரத்தில் பிரியங்கா சமீபத்தில் மலேசியா சென்றுள்ளார். அப்போது ஏராளமான ரசிகர்கள் அவருக்கு அளவு கடந்த வரவேற்பை கொடுத்துள்ளனர். அந்த நிகழ்வை ஒரு வீடியோ மூலம் கண்கலங்கி பேசியுள்ளார். அவர் பேசியதாவது, பிக்பாஸ் சென்றதே தவறு என்று எண்ணியிருந்தேன், ஏனென்றால் அங்கு சென்ற பின் என்னுடைய பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆனது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை தூக்கி விட்ட அந்த நாள் இன்னைக்கு தான்.. மெமோரிஸ் பிரிங் பேக்!!
இருப்பினும் அதை கடந்த வர தற்போது வரை முயற்சி செய்து வருகிறேன். ஆனால் அதை நினைத்து நான் வருத்தத்தில் இருக்கும் நிலையில், ரசிகர்கள் இப்படி என் மேல் அளவுக்கு மிகுந்த அன்பை வெளிக்காட்டுவார்கள் என சற்று கூட யோசித்துப் பார்க்கவில்லை என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.