‘800’ படத்தில் இருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி – முத்தையா முரளிதரன் வேண்டுகோளை ஏற்று முடிவு!!

0
vijay sethupathi
vijay sethupathi

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட இருந்த ‘800’ திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்த நிலையில் அதனை மேற்கோள்காட்டி விஜய் சேதுபதி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

விஜய் சேதுபதி விலகல்:

இலங்கை தமிழர்கள் படுகொலையின் போது கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாக பேசியதாக குற்றச்சாட்டு உள்ளது. தமிழரான அவர் தனது இனத்திற்கு துரோகம் செய்து விட்டதாக பலரும் இன்றுவரை கூறி வருகின்றனர். இந்நிலையில் அவரது வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து ‘800’ என்ற பெயரில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படத்தின் போஸ்டர் வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

தமிழின துரோகியான முரளிதரன் கதையில் நடிக்கக்கூடாது என அரசியல் தலைவர்கள், சினிமாத்துறையினர் என பலரும் விஜய் சேதுபதிக்கு வலியுறுத்தி வந்தனர். #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டேக் உடன் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் முத்தையா முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தான் படுகொலையை ஆதரிப்பவன் இல்லை என தெரிவித்திருந்தார். மேலும் திரைப்படத்தில் இலங்கை தமிழர் படுகொலை குறித்த காட்சிகள் இடம்பெறாது என படத்தின் இயக்குனரும் தெரிவித்து இருந்தார்.

இருப்பினும் விஜய் சேதுபதி அதில் நடிக்கக்கூடாது என எதிர்ப்பு வலுத்தது. இந்நிலையில் அப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக முத்தையா முரளிதரன் வைத்த வேண்டுகோள் கடிதத்தை ட்விட்டரில் பதிவிட்டு உள்ள நடிகர் விஜய் சேதுபதி, ‘நன்றி வணக்கம்’ என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here