கொரோனவிற்காக விஜய் சேதுபதி செய்த காரியம் – படப்பிடிப்பில் ஏற்பட்ட சலசலப்பு!!

0

தற்போது நடிகர் விஜய் சேதுபதி மக்கள் தனது ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிகமாக கூடுவதை பார்த்து ஷூட்டிங்கினை ரத்து செய்து விட்டு சென்றுவிட்டாராம். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

நடிகர் விஜய் சேதுபதி

தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக இருப்பவர் தான் விஜய் சேதுபதி. இவர் கடந்த சில மாதங்களாக பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவரது படங்கள் தொடர்ந்து வெளி வர உள்ளது. அடுத்த 2 அல்லது 3 வருடங்களுக்கு இவரது கால்ஷீட் கிடைப்பது கடினம்தானம். இவரது ரசிகர் பட்டாளம் என்றுமே பெரிது தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நடிகர் விஜய் சேதுபதியும் அனைவரிடத்திலும் மிகவும் அன்பாக நடந்து கொள்வதால் அவரது நல்ல குணத்திற்கு என்றும் ரசிகர்கள் உள்ளனர். இவரது ஷூட்டிங்கில் அதிகளவில் ரசிகர்கள் இருப்பது எப்போதுமே வழக்கம் தான். இப்படியான சூழலில் விஜய் சேதுபதி ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்து உள்ளார். இந்த ஷூட்டிங்கினை காண பல ரசிகர்கள் அந்த இடத்தில் திரண்டுள்ளனர்.

தயாரிப்பு நிறுவனம் வேண்டுகோள்

இந்தியாவில் தற்போது கொரோனா சூழலின் இரண்டாம் அலை பரவுவதால் மக்கள் பத்திரமாக இருக்க அறிவுறுத்தப்படும் இந்த வேளையில் மக்கள் அதிகளவில் கூடியதால் நடிகர் விஜய் சேதுபதியின் காவலர்கள் மக்களை விலக்க முயற்சித்துள்ளனர். ஆனால், யாரும் கேட்காததால் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது.

#INDvsENG ஒரு நாள் போட்டி – சதத்தை தவறவிட்ட தவான்!இந்தியா 197/4!!

இதனால் விஜய் சேதுபதியை ஷூட்டிங் பங்கேற்க வேண்டாம் என்று தயாரிப்பு துறை தரப்பில் இருந்து விஜய் சேதுபதியை அனுப்பியுள்ளனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று விஜய் சேதுபதியும் ஷூட்டிங்கை ரத்து செய்து விட்டு கிளம்பிவிட்டாராம். இந்த தகவல் காட்டு தீயாய் இணையத்தில் பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here