சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய வழக்கில் விதித்த அபராதத்தை எதிர்த்து மற்றும் தீர்ப்பில் உள்ள விமர்சனங்களை நீக்கக்கோரி நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நிதிமன்றத்தில் மேற்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 1.88 கோடிக்கு வாங்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு நுழைவு வரி வாங்க தடைக்கோரி நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த அந்த நீதிபதி, “நாட்டிற்காக செலுத்தப்படும் வரி என்பது நன்கொடை அல்ல, ஒவ்வொரு குடிமகனின் கட்டாய பங்களிப்பு. மேலும், நடிகர்கள் திரையில் மட்டும் ஹீரோக்களாக இல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் ஹீரோக்களாக இருக்கவும்” கூறினார். மேலும் நடிகர் விஜய்க்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
நீதிபதியின் கருத்து மற்றும் ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில், நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் மஞ்சுளா அமர்வில் வரும் ஜூலை 19 ஆம் தேதி விஜய்யின் மேல்முறையீட்டு மனு பட்டியலிடப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதைவிட கேவலம் வேறெதுவும் இல்லை