சினிமாவில் உச்சகட்ட நடிகராக இருக்கும் தளபதி விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் எக்கச்சக்கம் என்று தான் சொல்ல வேண்டும். சில காலமாகவே அவரின் படங்கள் நினைத்ததை காட்டினாலும் வெற்றி வாகையை சூடி வருகிறது. மேலும் வளர்ந்து வரும் இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்ததும் வருகிறார். சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படமும் இவருக்கு சூப்பர் ஹிட் கொடுத்தது.
சினிமாவில் களைகட்டி வரும் நிலையில் இவர்களின் குடும்பத்தில் சில பிரச்சனைகள் நிலவி வருகிறது. அதாவது விஜய் தன் அப்பா, அம்மாவிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சில காலமாகவே அவரின் அம்மா சோபா விஜய் குறித்து பல இன்டெர்வியூ கொடுத்துக்கொண்டே தான் உள்ளார்.
மகன் பாசத்திற்கு ஏங்கிகொண்டிருக்கும் சோபாவிற்கு ஒரு பக்கம் ஆதரவிற்கு அதிகரித்து வருகிறது. படத்துல மட்டும் பாசம், அன்புனு பேசுறீங்க நிஜத்துல இப்படி பிரிஞ்சு இருக்கீங்களே என்று விமர்சித்தும் வந்தனர். இப்படி இருக்க சோபா அம்மா கொடுத்த இன்டெர்வியூ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் தனது மருமகள்கள் வீட்டில் நடந்துகொள்வதை பற்றி கூறியுள்ளார். அதாவது வீட்டில் என்ன தான் வேலைகாரங்க இருந்தாலும் தனது மகன் மற்றும் மகளுக்கு எல்லாவற்றையும் இவர் தான் செய்து கொடுப்பாராம். சாப்பாடு ஊட்டுவதில் இருந்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்வதிலும் சிறந்தவர் என்று கூறியிருந்தார்.