நடிகர் விஜய், தங்களிடம் வந்து 18 வயதில் நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததாக சொன்னபோது நானும், அவர் தந்தையும் ஷாக் ஆகி விட்டோம் என ஷோபா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஷோபா உருக்கம்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் விஜய் குறித்த சில தகவல்களை அவரது தாயான ஷோபா சந்திரசேகர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது, விஜய் சென்னையில் லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துக் கொண்டிருக்கும் போதே, பாதியிலேயே அதை நிறுத்த போவதாக எங்களிடம் வந்து சொன்னார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
எனக்கு நடிப்பின் மீது தான் ஆர்வம் இருக்கிறது. நீங்கள், என்னை சினிமாவில் அறிமுகம் செய்து வைக்கிறீர்களா? இல்லை உங்கள் பெயரை வைத்து நானே அறிமுகம் தான் ஆகி கொள்ளவா? எனக் கேட்டார். உடனே நானும் எஸ்ஏசியும் மிரண்டு போனோம்.
கேப் இல்லாமல் கிளாமர் காட்டும் தர்ஷா குப்தா.., பார்த்ததில் thooக்கத்தை தொலைத்து நிற்கும் இளசுகள்!!
விஜய் அதோட நிற்காமல், விஜயகாந்த் படத்தில் வரும் ஒரு வசனத்தை மூச்சு விடாமல் பேசி காட்டி எங்களை மிரளச் செய்தார். அப்போதே முடிவு செய்து விட்டோம், இவருக்குள் ஏதோ திறமை இருக்கிறது கண்டிப்பாக பெரிய ஆளாக வருவார் என்று, அதே போல தான் இன்று விஜய் வந்து நிற்கிறார் என உருக்கத்துடன் பேசி உள்ளார்.