கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தை தவிக்க விட்டு சென்ற எஸ்.பி.பி யின் மரணத்திற்கு திரையுலகினரை சேர்ந்த பலரும் நேரில் சென்று தங்களது இரங்கலை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் எஸ்.பி.பி யின் இறுதி சடங்கில் கலந்துகொண்டார். இந்நிலையில் ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர். அப்பொழுது ரசிகர் ஒருவர் தனது செருப்பை தவற விட அதனை விஜய் கையால் எடுத்து கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இளைய தளபதி
கொரோனா தொற்றின் காரணமாக பிரபல பின்னணி பாடகரான ஸ்.பி.பி நேற்று உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்கி வருகிறது. ஆகஸ்ட் மாதம் இவருக்கு முதன்முதலில் கொரோனா தொற்று அறியப்பட்டது. 2 மாதத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் ஸ்.பி.பி. திரையுலகினரை சேர்ந்த பலருக்கும் இது பெரும் இடியாக வந்து சேர்ந்தது.
ஏனெனில் தொடர்ந்து பல உயிரிழப்புகளை திரையுலகம் சந்தித்து வருகிறது. பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவிக்க அவரது இறுதி சடங்கில் கலந்துகொண்டனர். மனோ, சத்யராஜ் உள்ளிட்ட அனைத்து பிரபலங்களும் அவரது பண்ணை வீட்டில் நடந்த இறுதி சடங்கில் கலந்துகொண்டனர். தமிழில் முன்னணி நடிகரான விஜய் ஸ்.பி.பி அவர்களின் இறுதி சடங்கில் கலந்துகொண்டார்.
This is♥️❤️
— Haricharan Pudipeddi (@pudiharicharan) September 26, 2020
இவரை பார்த்த ரசிகர்கள் பலர் அவரை சூழ்ந்து கொண்டனர். போலீசார் இவருக்கு பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு அழைத்து சென்ற போது கூட்டத்தில் ரசிகர் ஒருவரின் செருப்பு அவிழ்ந்து விட இவர் விஜய் அதனை தனது கையால் எடுத்து கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தால் ரசிகர்கள் பலர் நெகிழ்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.