விஜய் ஹசாரே டிராபியில் தொடர் சதங்களால் மகாராஷ்டிரா அணியின் ருதுராஜ் கெய்க்வாட் வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட்:
விஜய் ஹசாரே டிராபியின் இறுதிப் போட்டி குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில், சௌராஷ்டிரா மற்றும் மகாராஷ்டிரா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், மகாராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், கேப்டன் மற்றும் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 41 வது ஓவர் வரை நிலைத்து நின்று விளையாடி சதத்தை கடந்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த போட்டியில், இவர், 131 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரி 4 சிக்ஸர் உட்பட 108 ரன்களை குவித்துள்ளார். இவர், காலிறுதியில் உலக சாதனை ஒன்றை படைத்து, இரட்டை சதம் அடித்தும் அசத்தியிருந்தார். இதனை தொடர்ந்து, அரையிறுதி போட்டியிலும், சதம் (168) அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷப் பந்த் இதுக்காக தான் அணியில் இருக்காரா??…, உண்மையை உடைத்த இந்திய முன்னாள் வீரர்!!
இவர் இறுதி போட்டியிலும் சதம் அடித்ததால், வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, விஜய் ஹசாரே டிராபியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 12 சதங்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன், இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா மற்றும் மகாராஷ்டிரா அணியின் அங்கித் பாவ்னே ஆகியோர் தலா 11 சதங்களை அடித்திருத்தை சாதனையாக இருந்தது. இதனை தற்போது ருதுராஜ் கெய்க்வாட் முறியடித்துள்ளார்.