அண்மையில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த லிகர் திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில், அவர் குறித்து மோசமான தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தேவரகொண்டா:
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான திரைப்படம் தான் லிகர். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் உருவாகி, கடந்த மாதம் ஆகஸ்ட் 25ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. ஆனால் லிகர் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. மேலும் அதிகமான நெகட்டிவ் விமர்சனங்களை அள்ளி குவித்தது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான விஜய் தேவரகொண்டா மிகப்பெரிய சர்ச்சைகளையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் படுதோல்வி அடைந்ததால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் தான் வாங்கிய சம்பளத்தில் இருந்து பெரிய தொகையை தயாரிப்பாளருக்கு திருப்பி கொடுத்து விட்டதாக தகவல்கள் வெளியானது.
அட்லீக்கு இன்ப அதிர்ச்சி அளித்த நடிகர் விஜய்.., ட்விட்டரில் காட்டுத்தீயாய் பரவும் புகைப்படம்!!
அதுமட்டுமின்றி அடுத்த திரைப்படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்க அவர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அது எல்லாம் பொய்யான தகவல், அவர் தன்னுடைய சம்பளத்திலிருந்து ஒரு ரூபாய் கூட திருப்பிக் கொடுக்கவில்லையாம். மேலும் இந்த செய்தியை அவருடைய மேனேஜர் உதவி மூலம் பரப்பியுள்ளார். அவருக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை போக்குவதற்கு இந்த மாதிரி செயலை செய்துள்ளார் என்று கூறப்படுறது.