தமிழ் திரையுலகின் தளபதியான விஜய்க்கும் அவரது அப்பா எஸ்.ஏ.சி இடையே பிரச்சனை இருந்தது உண்மை தான் என்று உறுதியாகியுள்ளது. இதனை எஸ்.ஏ.சியே பேட்டி ஒன்றில் பகீரங்கமாக ஒத்துக்கொண்டுள்ளார்.
தளபதி விஜய்:
மாண்புமிகு மாணவன் திரைப்படத்தின் மூலம் திரையில் கால் பதித்த விஜய் தற்போது உச்சகட்ட நடிகராக வலம் வருகிறார். இவரது படங்கள் மட்டும் தான் தற்போது வசூலில் சாதனை படைத்து வருகிறது. லாக்டவுன் சமயத்தில் இருந்தே அவர் நடித்த அனைத்து படங்களுமே வெற்றி தான்.
இவருக்கும் இவரது அப்பாவும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக இணையத்தில் செய்தி வைரலானது. அதுவும் அரசியலில் இறங்க சொல்லி எஸ்.ஏ.சி வற்புறுத்தியதால் தான் இந்த பிரச்சனை என்று சொல்லப்பட்டது.
ஆரம்பத்தில் இருந்தே விஜய் நடிக்கும் அனைத்து படத்தின் கதையையும் எஸ்.ஏ.சி தான் தேர்வு செய்து வந்தார். ஆனால் இந்த சண்டைக்கு பிறகு அனைத்து படங்களையும் விஜய் தான் தேர்வு செய்து வருகிறாராம். இதனால் விஜய்யை இப்பொழுதெல்லாம் பார்க்கவே முடியவில்லை என்றும் எஸ்.ஏ.சி கூறியிருந்தார்.
இந்நிலையில் முக்கிய விஷயம் ஒன்றை எஸ்.ஏ.சி கூறியுள்ளார். அதாவது தனக்கும் விஜய்க்கும் சண்டை இருக்க தான் செய்தது. ஆனால் அது எங்க குடும்ப பிரச்னை. அதை நாங்க பாத்துக்குவோம். நீங்க ஏன் அதை பேசணும் என்று கூறி உள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்