‘என் மகனுடன் பேசி 3 மாதங்களுக்கு மேல் ஆகிறது’ – அப்பாவை கெஞ்ச வைக்கும் விஜய்!!

0

தமிழில் முன்னணி நடிகரான விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இடையே தற்போது பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தனது மகனுடன் பேசி 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது என புலம்பி வருகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

விஜய், சந்திரசேகர் கருத்து வேறுபாடு

தமிழ் திரையுலகில் உச்சகட்ட நடிகராக இருப்பவர் விஜய். ஆரம்ப காலத்தில் இருந்தே தனது அப்பாவின் சப்போர்ட்டால் இந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறார் விஜய். பூவே உனக்காக படம் வரையிலும் எஸ்.ஏ.சந்திரசேகர் தான் விஜய் நடிக்கும் படங்களை தயாரித்து வந்தாராம். சிறு வயதில் இருந்தே இவருக்கு இருந்த நடிப்பு ஆசையால் தனது மகனின் முன்னேற்றத்திற்காகவும் எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை என்று அவருக்கு முழு ஆதரவாக இருந்து வந்தாராம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இத்தனை நாட்கள் படங்கள் தேர்வு செய்வது எல்லாமே விஜயின் அப்பா தானாம். துப்பாக்கி படத்திற்கு பிறகு தான் நடந்த சண்டையில் விஜய் தனது கதைகளை தானே தேர்வு செய்ய ஆரம்பித்தாராம். அதற்கும் மேல் விஜய் அரசியலுக்கு வர போவதாக எஸ்.ஏ.சந்திரசேகர் கூற விஜய்க்கும், அவருக்கு பெரிய சண்டையே ஏற்பட்டு விட்டது. இதனால் இருவரும் தற்போது பிரிந்து தான் உள்ளனர். விஜயும் தன்னுடைய ரசிகர்கள் யாரும் தனது அப்பா தொடங்கிய கட்சிக்கு ஆதரவு தர கூடாது என்றும் சொல்லிவிட்டார்.

கூகுள் வருவாயில் 85% பங்கை செய்தித்தாள் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் – INS கோரிக்கை!!

தற்போது விஜயின் அப்பா பேட்டி ஒன்றில் விஜயை பார்த்து 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதாகவும், இத்தனை நாட்கள் அவரது வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்த தன்னை இப்படி மறந்துவிட்டார். மன்னிப்பு கேட்பதற்காக எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் அவர் நிராகரித்து வருகிறார் என்றும் கூறியிருந்தார். மேலும் அவர் இப்படி இருப்பதற்கு காரணம் ஒரு சிலர் தான் என்று மறைமுகமாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here