தமிழ் சினிமாவின் முன்னணி நாயகரான விஜயகாந்த், மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தின் மூலம், ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் ரீ-என்ட்ரி :
தமிழ் சினிமாவில் 90s காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். அதிரடி நாயகனாக வலம் வந்த இவர், அரசியலில் இறங்கியதால் சினிமாவுக்கு எண்ட் கார்டு போட்டார். தொடர்ந்து இவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், உடல்நிலை மிகவும் நலிவுற்றது.
சமீப காலமாக, கொஞ்சம் தேறி வந்த இவர் தற்போது பிரபல இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. விஜய் ஆண்டனி நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும், விஜயகாந்த் குறித்த காட்சிகள் மட்டும் அப்படியே இருப்பதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விஜயகாந்த் உடல்நிலை சரியானதும், இவர் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளதாகவும், டையூ டாமன் உள்ளிட்ட தீவு பகுதிகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமையை இந்த திரைப்படம் பெற்றுள்ளதாகவும் இயக்குனர் பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்த அப்டேட் தற்போது வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்