இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மும்பை சென்ற காரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
விக்கி- நயன்
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களை இயக்கி முன்னணியில் இருந்து வருபவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் கடைசியாக அஜித்தை வைத்து ஏகே 62 படத்தை இயக்க இருந்த நிலையில், சில காரணத்தால் கைவிட்டு போனது. இந்நிலையில் சமீபத்தில் மனைவி நயன்தாரா மற்றும் தனது இரு குழந்தைகளுடன் மும்பைக்கு சென்றார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அப்போது எடுக்கப்பட்ட போட்டோ வீடியோக்கள் வைரலாக பரவியது. மேலும் இவர்கள் நயனின் ஷூட்டிங்கிற்காக சென்றுள்ளார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது விக்னேஷ் சிவன் தற்போது விஜய் சேதுபதியை வைத்து பான் இந்திய படத்தை எடுக்க இருக்கிறார். மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை நடிக்க வைக்க விக்னேஷ் சிவன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம்.
மேலும் கேங்ஸ்டர் பாணியில் உருவாகும் இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளர் ஒருவர் கதை எழுத இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தான் தனது குடும்பத்துடன் மும்பைக்கு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் எடுக்க விக்னேஷ் சிவன் திட்டமிட்டுள்ளார். மேலும் அஜித்தை பழிதீர்க்கும் நோக்கத்தில் தான் விக்கி செயல்பட்டு வருகிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.