நம்மில் பலருக்கும் இந்த வெயில் பல காரணங்களால் நம் முகத்தில் பருக்கள் வர கூடும். மேலும் இந்த பருக்களால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக பலர் கெமிக்கல் நிறைந்த மருந்துகளை தேடி செல்கின்றனர். ஆனால் இன்று நாம் பார்க்கப் போகும் இந்த கற்பூரவள்ளி face பேக் நம் முகத்தில் இருக்கும் பருக்களை நீக்கி சருமம் அழகுபெற உதவியாக இருக்கும்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
தேவையான பொருட்கள்;
- கற்பூரவள்ளி இலை – 50 கிராம்
- தயிர் – 3 டீஸ்பூன்
- கடலை மாவு – 1 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்;
இந்த கற்பூரவள்ளி face பேக் தயார் செய்வதற்கு நாம் எடுத்து வைத்துள்ள கற்பூர வள்ளி இலையை சுத்தமாக கழுவி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும். பிறகு இதோடு சிறிதளவு தயிர் மற்றும் கடலை மாவு சேர்த்து பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது நாம் ரெடி செய்து வைத்துள்ள இந்த கற்பூரவள்ளி பேஸ் பேக்கை நம் முகத்தில் அப்ளை செய்து கொள்வதற்கு முன் நம் முகத்தை சுத்தமாக கழுவி ஒரு காட்டன் துணியில் துடைத்து கொள்ளவும். இதன் பின், இந்த பேக்கை அப்ளை செய்து வாஷ் செய்து கொள்ளவும். இந்த டிப்ஸை வாரத்தில் ஒரு முறை பாலோவ் செய்து வருவதன் மூலம் நம் முகத்தில் உள்ள முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகிவிடும்.