இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று பல எதிர்பார்ப்புகளுக்கு நடுவே வெளியாகியுள்ளது. இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் சிம்பு ஆகிய இருவரும் மூன்றாவது முறையாக இந்த திரைப்படத்தில் இணைந்து இருப்பதால் ரசிகர்கள் பல மாதங்களுக்கு முன்பு இருந்தே ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்ததை போலவே நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனிடையே சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஒரு காட்சியில் சிம்பு அவன் எப்படி இதற்குள் வந்தான், அதற்கு அப்புறம் அவன் எப்படி டான் ஆகி, கடைசியில் பில்லா ஆகிறான் என்பது தான் கதை என கூறியிருப்பார்.
அதை போலவே இந்த திரைப்படம் இருந்ததாகக் கூறப்படுகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் காட்சியை வைத்து இந்த திரைப்படத்தை முழுக்க முழுக்க இயக்கி இருப்பார்களோ எனவும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் காட்சியினை வெளியிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.