தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் தான் சம்யுக்தா. இவர் மலையாளத்தில் ”பாப்கார்ன்” என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தனது சினிமா கெரியரை தொடங்கியுள்ளார். இதை தொடர்ந்து தமிழில் ‘களரி’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தன்னை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் தற்போது இவர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் ”வாத்தி” திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. அதில் கலந்து கொண்ட இவர் இப்படம் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.இதுபோக இப்படத்தில் நானும் தனுஷ் அவர்களும் ஆசிரியராக நடித்துள்ளோம்.
ஆர்யாவுக்கு கால் பண்ணா போதும்.., இதான் நடக்கும்.., மேடையில் உண்மையை உடைத்த ரேஷ்மி!!
மேலும் ஒவ்வொரு மாணவர்களும் வேலைக்காகவோ, பணத்துக்காகவோ, இல்லாமல் நமக்குப் பிடித்தமான படிப்பை எடுத்து படிக்க வேண்டும் என்று தனது கருத்தை கூறியிருந்தார். பொதுவாக எனக்கு என் பெயரின் பின்னால் மேனன் என்ற சாதி பெயரை வைத்து அழைப்பது எனக்கு பிடிக்காது. இதனால் ‘ சம்யுக்தா மேனன்’ என்று குறிப்பிடுவதை நான் முற்றிலும் தவிர்க்கிறேன். மேலும் என்னை மீடியாவிலும் சம்யுக்தா என்று மட்டும் அழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.