தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர்கள் தான் விஜய் மற்றும் அஜித் குமார். இவர்கள் நடிப்பில் உருவான வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் 9 வருடங்களுக்கு பிறகு நேற்று திரை அரங்குகளில் வெளியானது. இருவரின் படங்களை பார்த்து விட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நேற்று அஜித்தின் துணிவு படம் அதிகாலை 1 மணிக்கும், விஜயின் வாரிசு படம் அதிகாலை 4 ,மணிக்கும் சிறப்புக் காட்சிகள் வெளியிடப்பட்டது. இதனால் இருவரின் ரசிகர்களும் திரை அரங்குக்கு முன்பு பட்டாசு வெடித்து பேனருக்கு மாலை போட்டு அமர்களப்படுத்தினர்.
பார்வதியை பார்த்து அந்த கேள்வி கேட்ட மீனா.., இன்னொரு பக்கம் ரொமான்ஸ் செய்யும் கதிர்-முல்லை!!!
தற்போது திரைப்பட விநியோகஸ்தர்கள் தமிழக அரசு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அதாவது ஜனவரி 13, 14 மற்றும் 18 ஆம் தேதி அன்றும் மட்டும் வாரிசு மற்றும் துணிவு படத்திற்கு சிறப்பு காட்சிகள் ஒளிபரப்ப அனுமதி வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் இடைப்பட்ட நாட்களான 14 முதல் 17 ஆம் தேதி ஒருநாளுக்கு 4 காட்சிகள் மட்டுமே ஒளிபரப்பாகும் என்று தெரிவித்துள்ளனர்.