தமிழகத்தில் நாளை வாரிசு மற்றும் துணிவு படங்கள் ரிலீசாக உள்ளது. இதனால் இருவரின் ரசிகர்களும் ஏகபோக எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் இரண்டு படங்களும் விடுமுறை நாட்களில் வெளியாக இருப்பதால் டிக்கெட் விற்பனை அனைத்து தியேட்டர்களிலும் களை கட்டி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படங்களில் எந்த படம் அதிக வசூலை ஈட்டும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் இப்படங்களின் டிக்கெட் விற்பனை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சைக்கோ திரில்லராக உருவான வரலட்சுமியின் சபரி திரைப்படம்.., வெளியான க்ளிம்ஸ் வீடியோ!!
அதாவது தற்போது இருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி தியேட்டர் உரிமையாளர்கள் டிக்கெட் விற்பனையை உயர்த்த அதிக வாய்ப்புள்ளது. எனவே தியேட்டர்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு டிக்கெட் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.