திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கோவிலுக்குள் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று நுழைந்ததால் பொதுமக்கள் இடையே பரபரப்பு நிகழ்தது.
கோவிலுக்குள் மலைப்பாம்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு கோயிலில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்துள்ளது. அதைக் கண்டு அச்சம் அடைந்த சிலர் தெரிவித்த தகவலால் கிராமமே திரண்டது.சுஷாந்த் சிங்கின் கடைசி படம் எப்படி இருக்கு???
10 அடி நீள பாம்பு
கிராம மக்களின் உதவியுடன் பாம்பினை கோவிலில் இருந்து வெளியே அனுப்பி பின்னர் பாம்பு பிடிக்கும் இலியாஸ் என்ற இளைஞரை வரவழைத்துள்ளனர். அவரது உதவியோடு, நீண்ட நேரம் போராடி அந்த 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்தனர்.
வனத்துறையிடம் ஒப்படைப்பு
பின்னர் மலைப்பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த பாம்பு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டது.இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.