Thursday, April 25, 2024

‘உனக்காவது 3 பேரு, நான் 14 பேர தாண்டி வந்தவ’ – வனிதாவை கலாய்த்த ஷகிலா!!

Must Read

தற்போது அனைவராலும் பரபரப்பாக அதிகமாக பேசப்படும் நபர் வனிதா விஜயகுமார் தான். காரணம், கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் திருமணம் செய்து கொண்ட பீட்டர் பாலை விட்டு பிரிந்தது. இது குறித்து அவர் ஒரு வீடியோ கூட பதிவிட்டிருந்தார். தற்போது கவர்ச்சி நடிகை ஷகீலா உடன் ஒரு வீடியோவில் பேசியுள்ளார் வனிதா. இது தற்போது வைரலாக பரவி வருகின்றது.

பிக் பாஸ் புகழ் வனிதா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் 3” நிகழ்ச்சி மூலமாக பலருக்கும் வெளிச்சமானவர், வனிதா விஜயகுமார். அவரது அடாவடியாக பேச்சும், மற்றவர்களை சண்டை இழுக்கும் தன்மையும் அவருக்கு என்று தனி புகழை பெற்று தந்தது.

அதற்கு பின் தனக்கென தனி யூடிப் சேனல் துவங்கி சமையல் வீடீயோக்களை பதிவிட்டு வந்தார். அதற்கு பின் பீட்டர் பால் என்பவரை பலரது எதிர்ப்புகள், கிண்டல்களுக்கு மத்தியில் மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

நன்றாக போய் கொண்டு இருந்த அவரது வாழ்க்கை தற்போது மீண்டும் கேள்விக்குறி ஆகியுள்ளது. காரணம், திருமணம் நடந்து முழுதாக 6 மாதங்கள் கூட முடிவு பெறாத நிலையில் அவர் பீட்டர் பாலை விட்டு பிரிந்து விட்டார். தான் எதற்காக அவரை விட்டு பிரிந்தேன் என்பது குறித்து ஒரு வீடீயோவினை பதிவிட்டிருந்தார். இதற்கெல்லாம் மத்தியில் அவர் கவர்ச்சி புயலாக ஒரு காலத்தில் இருந்த ஷகீலாவுடன் பேசும் வீடியோ இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

அப்படி என்ன பேசிக்கொண்டார்கள்:

அந்த வீடியோவில் துவக்கத்தில் ஷகீலா இது என்ன கோலம் என்று வனிதாவை பார்த்து கேட்கிறார். அதற்கு வனிதா “பிரேக் அப் மேக் அப்” என்று கூறுகிறார். அதற்கு ஷகிலா 13 பேரை கடந்து விட்ட நிலையில் நான் ஒரு நாள் கூட இப்படி ஒரு மேக் அப் செய்தது இல்லை என்று வெளிப்படையாக கூறுகிறார். பின், ஷகீலா ரமேஷ் என்பவருடன் தனக்கு ஏற்பட்ட அன்பு கலந்த மரியாதையான அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதே போல் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை தான் வனிதா மற்றும் கமல்ஹசான் இவர்களுக்காக தான் பார்த்தேன் என்று கூறும் அவர் மீரா மிதுன் பற்றியம் கூறியுள்ளார். அந்த பெண்ணிற்கு என்ன தான் பிரச்னை? என்று கேட்கிறார்.

இப்படியாக சில பல விஷயங்களை இவர்கள் இருவரும் பகிர்ந்து கொள்ளும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

வங்கி வாடிக்கையாளர்களே., நாளை (ஏப்ரல் 26) இந்த பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் டெபாசிட் செய்தல், வித்ட்ராவல் உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளும் மெஷின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் ஒரு சில வேலைகளுக்காக...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -