பிரபல சர்ச்சை நாயகியான வனிதா, தன் அண்ணன் அருண் விஜய்யை நேருக்கு நேர் சந்தித்த அனுபவங்களை, ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
வனிதா பேட்டி :
விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம், பெரிய அளவில் பேசப்பட்டவர் வனிதா விஜயகுமார். ஆரம்பத்திலிருந்து, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த இவர், சர்ச்சை நாயகி என சினிமாவில் அழைக்கப்பட்டு வந்தார். கடந்தாண்டு 3வதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து, பாதியிலே அவரை விட்டுப் பிரிந்து சென்றார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இவரின் இது போன்ற நடவடிக்கையால், இவரின் அப்பா விஜயகுமார் மற்றும் அண்ணன் அருண் விஜய் போன்றோர் இவருடன் பேசுவதே இல்லை. அது மட்டும் இல்லாமல் இவரை குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தன் அண்ணன் அருண் விஜய்யை, சமீபத்தில் நேருக்கு நேர் பார்த்ததாக பேட்டி ஒன்றில் வனிதா தெரிவித்துள்ளார்.
ரக்ஷிதா, ஷிவின் 2 பேரையும் வச்சு செய்யாம விடமாட்டேன்., கொந்தளித்த அசீம்! ரியல் போட்டி Start மக்களே!!
பொது இடத்தில் கண் கலங்கி நின்ற என்னை பார்த்துவிட்டு, இங்கு எதுவும் பேச வேணாம். போய் என்ஜாய் பண்ணு என கூறிவிட்டு என்னை தவிர்த்து விட்டு சென்றார். நான் உடனே, நான் எங்க வரணும்னு சொல்லுங்க கண்டிப்பா வரேன். அங்க உட்கார்ந்து பேசினா நம்ம பிரச்சனை எல்லாம் தீர்ந்திடும் என கூறினேன். ஆனால் அவர் எதுவும் பேசாமல் அப்படியே சென்று விட்டார். எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லை. விரைவில் நான் எங்க குடும்பத்துடன் சேர்ந்து விடுவேன் என உருக்கமாக பேசியுள்ளார்.