KPY செட்டில் பயங்கர மேக்கப்பில் வனிதா வெளியிட்ட புகைப்படம் – கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். இந்த வருடம் முழுக்க பல சர்ச்சைகளை சந்தித்து தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தொடர்ந்து தனது புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வந்தார். தற்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வனிதா விஜயகுமார்:

தமிழில் வெளியான சந்திரலேகா படத்தில் விஜய் உடன் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் வனிதா. அதன் பிறகு திருமணம் ஆகி பல சர்ச்சைகளில் சிக்கிய வனிதா தனது மகன் ஸ்ரீஹரிக்காக பல வழக்குகளை சந்தித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இறுதியில் அவருக்கு தோல்வியே மிஞ்சியது. இதனால் ஒட்டுமொத்த குடும்பத்தை விட்டும் பிரிந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரது அப்பா, தங்கை என அனைவரையும் பிரிந்தே வாழ்ந்து வந்தார். சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய ராணி என்றால் வனிதா தான். எடுத்த எடுப்பிலேயே சண்டையிடுவது தான் வனிதாவின் வழக்கமே.

அவரின் அப்பாவை பற்றி பல இடங்களில் தவறாகவும் பேசினார். சில காலமாக அமைதியாக இருந்த வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்ததால் அதில் கலந்து கொண்டார். வந்த இரண்டு நாளிலேயே வனிதாவின் சுயரூபம் தெரியவந்தது.

ஜீவா வந்து கூப்பிடாமல் அந்த வீட்டிற்கு வர மாட்டேன் – முல்லையிடம் கொந்தளிக்கும் மீனா!!

பலரும் அவருக்கு எதிராக இருந்தனர். தான் வைத்தது தான் சட்டம் என்றே இருந்தார். இதனால் வீட்டை விட்டும் வெளியேறினார். அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் மறுவாய்ப்பும் கொடுக்கப்பட்டது. அதில் வனிதாவுக்குள் இருக்கும் இன்னொரு பாசமான முகம் தெரிய வந்தது. மேலும் மக்கள் மனதிலும் நல்ல இடத்தை பிடித்தார்.

குக் வித் கோமாளி டைட்டில் வின்னரும் வனிதா தான். லாக்டவுன் சமயத்தில் யூடுப் சேனலை ஆரம்பித்து நன்கு சம்பாதிக்கவும் ஆரம்பித்தார். அதற்கு உதவியாக இருந்த பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டதில் இருந்து தான் இவரின் வாழ்க்கையில் பிரச்சனையே ஆரம்பித்தது.

அதன் பிறகு இவர்களின் உறவும் 6 மாதம் கூட நீடிக்கவில்லை. இவர்களின் பிரேக்கப் விஷயமே சமூக வலைத்தளங்களில் ட்ரென்ட் ஆனது. ஆனாலும் சில நாட்களிலேயே தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார் வனிதா. தற்போது விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

அதன் இறுதி சுற்றுக்கான ஷூட்டிங் நடந்து வருகிறது. இதனால் தொடர்ந்து இரண்டு நாட்களாக செட்டில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அவரின் கெட்டப்பை பார்த்த பலரும் காட்டுப்பூச்சி வனிதா எனவும் கிண்டலடித்து வந்தன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here