விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், இவருக்கு அதிகம் பேரும் புகழும் வாங்கி கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதையடுத்து குக் வித் கோமாளி சீசன் 1 ல் கலந்து கொண்டு முதல் பரிசையும் தட்டி சென்றார். இதைத்தொடர்ந்து சமையல் திறமையை காட்ட யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார். அதில் அவருக்கு உதவியாளராக வந்தவர் தான் பீட்டர் பால். ஏற்கனவே திருமணமான இவரை 3வது முறையாக வனிதா விஜயகுமார் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமண வாழ்க்கையும் கடைசி வரை நீடிக்கவில்லை.
நிக்கவே தெம்பில்லை., அதை செய்ய சொன்னா அழுவாரு., பயில்வானை பங்கமாக கலாய்த்த டெலிபோன் ராஜ்!!
இந்த துக்கத்திலேயே பீட்டர் பாலு சமீபத்தில் இறந்து போனார். இந்நிலையில் வனிதா விஜயகுமார் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இறைவன் அருளால் எனக்கு மீண்டும் யார் மீது வேண்டுமானாலும் காதல் ஏற்படலாம் என புதிய குண்டை தூக்கி போட்டுள்ளார். அதே போல் அப்படி ஒன்று நடந்தால் என் வாழ்க்கையில் சரியான முடிவை நான் எடுப்பேன் என்று கூறியுள்ளார்