இந்த வருடம் முழுவதும் நாம் பல சர்ச்சைகளையும், கடினமான சில சவால்களையும் கடந்து ஆண்டின் நிறைவு பகுதிக்கே வந்துவிட்டோம் என்றே சொல்லலாம். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் இந்த கொரோனாவை விட அதிகமாக பரவியது என்னவோ வனிதா பற்றிய செய்திகள் தான். அதன் முழு தொகுப்பையும் இப்போது பார்ப்போம்.
வனிதா விஜயகுமார்
நடிகர் விஜயகுமாரின் மகளாகிய வனிதா இந்த வருடத்தில் பல ஆட்டங்களை நிகழ்த்திவிட்டார் என்றே சொல்லலாம். அவரது திருமண விவகாரத்தில் ஆரம்பித்த பிரச்சனை இதுவரையிலும் நீண்டுகொண்டுள்ளது. மேலும் இவர் தன் மகனுக்காக போராடி நீண்ட நாட்களுக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவரை பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு அவர் நடந்து கொண்ட விதம் ஷாக் என்றே சொல்லலாம்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பிக் பாஸ் வீட்டில் முதல் வார தலைவரான இவர் நடந்துகொண்ட விதம் பலரையும் அதிர்ச்சியாக்கியது. பல அராஜகங்களை செய்து வந்தார். இவர் பேச்சை தான் கேட்க வேண்டும் என்று யாரையுமே பேசவிடுவது இல்லை. இதனால் ரசிகர்களின் வெறுப்பையே சம்பாதித்தார்.
வீட்டை விட்டும் வெளியேறினார். அதன் பிறகு அவரை மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தனர். அவரின் மற்றொரு முகத்தையும் பார்க்க முடிந்தது. இதனால் ஓரளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலையும் கைப்பற்றினார்.
விஜய் டிவியை பின்னுக்கு தள்ளிய பிரபல தொலைக்காட்சி!!
அதன் பிறகு அவரது வாழ்கை நல்லபடியாக தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் அவர் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டதிலிருந்து தான் பல பிரச்சனைகள் ஆரம்பித்தன. இவரின் இந்த மூன்றாவது திருமணம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
அதுவும் விவாகரத்து வாங்காமல் இந்த திருமணத்தை செய்து கொண்டதால் பீட்டர் பால் மனைவி எலிசபெத் போலீசில் புகார் கொடுத்தார். இதற்கு திரையுலக பிரபலங்கள் ஆதரவு அளித்து வனிதாவுடன் பேசினர். இவர்களை எல்லாம் வனிதா சமூக வலைத்தளங்களில் கழுவி ஊற்றினார்.
குறிப்பாக இதில் மிகவும் பாதிக்கப்பட்டது என்னவோ லட்சுமி ராமகிருஷ்ணன் தான். இதுவரையிலும் அவரால் மீண்டு வர முடியவில்லை என்றும் கூறினார். இப்படி எல்லாம் பல அராஜகங்களை செய்து வந்த வனிதாவுக்கு எதுவும் மிஞ்சவில்லை. பீட்டர் பாலும் அவரை விட்டு பிரிந்தார். மேலும் ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்ற பழமொழி இவருக்கு தான் பொருந்தும்.