‘நெத்தியில குங்குமம் வச்சா கூட அடுத்த புருஷனானு கேக்குறாங்க’ – குமுறும் பிக் பாஸ் பிரபலம்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான வனிதா விஜய் குமார் தற்போது தன்னை பற்றி பலரும் கேவலமாக பேசுவதாக கூறி பேட்டியளித்துள்ளார்.

வனிதா

நடிகர் விஜய் குமாரின் மகளாகிய வனிதா ஆரம்பத்தில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார். அதன் விளைவாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. முதல் நாளிலேயே தனது பவரை காட்ட ஆரம்பித்தார். பல அதிரடியான நடவடிக்கையால் ரசிகர்களின் வெறுப்பிற்கு ஆளானார்.

தேவையில்லாமல் சண்டை ஏற்படுத்தி விடுவது நான் தான் எல்லா இடத்திலும் முன்னிலையில் இருக்க வேண்டும் என்று பல வேலைகளை செய்து வந்தார். வத்திக்குச்சி வனிதா என்று அவரை கேலி செய்ய ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் இவர் 2 திருமணம் செய்து தான் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாக்டவுன் சமயத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. இந்த உறவும் 6 மாதங்கள் கூட நீடிக்கவில்லை. இதனால் பலரின் கேலி கிண்டலுக்கு ஆளானார். சில நாட்களாக தன் வேலையில் மட்டுமே ஈடுபாடாக இருந்த வனிதா பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஆனால் அதிலும் பிரச்சனை ஏற்பட தற்போது அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டார். தற்போது உருக்கமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதாவது தான் நெற்றியில் குங்குமம் வைத்தால் கூட இப்போ யாரு புருஷனு கேக்குறாங்க. இந்த மாதிரி ஏன் வாழ்க்கையில நிறைய பிரச்சனை உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் கொரோனாவால் பாதிப்படைந்தது சினிமா திரையை சேர்ந்தவர்கள் தான். ஆனாலும் சோசியல் மீடியாவில் இது மாதிரியான சில விஷயங்கள் நடந்து கொண்டு தான் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here