வத்திக்குச்சியில் இருந்து காட்டுப்பூச்சியாக மாறிய வனிதா – கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். இந்த வருடம் முழுவதும் கொரோனாவிற்கு அடுத்து ஹாட் டாபிக் என்றால் அது வனிதா பற்றிய விஷயம் தான். இப்பொழுது ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் வனிதா ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வாத்திக்குச்சி வனிதாவாக இருந்து காட்டுப்பூச்சி வனிதாவாக உருவெடுத்திருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

வனிதா

நடிகர் விஜயகுமாரின் மகளாகிய வனிதா தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். முதல் திருமணத்தில் ஆரம்பித்து தற்போது வரை வனிதா வாழ்க்கையில் பிரச்சனை மட்டுமே இருந்து வருகிறது. முதல் திருமணம் விவகாரத்தில் முடிய அதன் பிறகு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

அதுவும் பிரச்சனையிலேயே முடிந்தது. தனது மகன் ஸ்ரீஹரிக்காக போராடினார். கடைசி வரை அவரும் வர மறுக்க சிலகாலமாக அமைதியாகவே இருந்து வந்தார். அதன் பிறகு அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. முதல் நாளே போட்டியாளர்களை வச்சு செய்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எடுத்த எடுப்பிலேயே முரட்டு தனம் தான். ஆரம்பத்தில் மக்கள் இவரை கழுவி ஊற்ற தான் செய்தார்கள். ஆனாலும் அனுஷ்கா திருந்துவதாக இல்லை. அதற்கு அடுத்து வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்தார். இந்த தடவை வனிதாவின் மறுபக்கத்தை பார்க்க முடிந்தது.

வீட்டை விட்டு வெளியே வந்த வனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலையும் கைப்பற்றினார். இதுவரையிலும் சரியாக போய்க்கொண்டிருந்த வனிதாவின் வாழ்க்கையில் திடீரென வந்தவர் தான் பீட்டர் பால்.

கொழுகொழு உடல் எடையை குறைத்து தேவதையாக மாறிய அனுஷ்கா!!

இவரை மூன்றாவதாக திருமணம் செய்துக்கொண்டது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு இவர்களுக்கு ஏற்பட்ட பிரேக்கப் விஷயம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டது. ஆனால் அதையும் கடந்து வந்த வனிதா கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

இந்நிலையில் ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியின் இறுதி சுற்று நடைபெற்றுள்ளது. அதில் எடுத்த புகைப்படத்தை வனிதா வெளியிட்டுள்ளார். பலரும் அவரின் கெட்டப்பை பார்த்து காட்டு பூச்சி வனிதா என நக்கலடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here