தற்போது மீடியாவில் வைரலாக ஓடிக்கொண்டிருக்கும் பிரச்சனை என்றால் அது வனிதா – பீட்டர் பால் பிரேக்கப் தான். பீட்டர் பால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டது பல பிரச்சனைகளை ஏற்படுத்தியது. தற்போது இவர்கள் இருவருக்கும் பிரிவு ஏற்பட்ட நிலையில் தற்போது ‘தனக்கு நடந்தது திருமணம் அல்ல வெறும் நிச்சயதார்த்தம் தான்’ என்று என்று கூறி ஷாக் கொடுத்துள்ளார் வனிதா.
வனிதா பீட்டர் பால்
பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வனிதா தனியாக யூடூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார். அதற்கு உதவியாக இருந்த பீட்டர் பாலை லாக்டவுன் சமயத்தில் திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே திருமணம் ஆன பீட்டர் பால் முதல் மனைவியிடம் இன்னும் விவாகரத்து வாங்காமலேயே திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் முதல் மனைவி எலிசபெத் போலீசில் புகார் அளித்ததன் பேரில் வனிதா திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
போலீசிடம் புகார் அளிக்க சென்ற எலிசபெத்திடம் போலீசாரே இன்னும் சில மாதங்களில் வனிதா பீட்டர் பாலை கழட்டி விட்டு விடுவார் கவலைப்படாதீர்கள் என்று கூறியதாக எலிசபெத் கூறியிருந்தார். இந்நிலையில் அனைவரும் கூறியபடி திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆன நிலையில் வனிதாவிற்கும் பீட்டர் பாலுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.
இதனை பற்றி வனிதா தனது யூடூப் சேனலில் கூறியுள்ளார். அதில் இந்த வலைத்தளங்களில் தன்னை பற்றி எந்த நியூஸ் வந்தாலும் ஈசியாக வைரலாகி விடுகிறது. இது ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் பெருமையாக உள்ளது. எனக்கும் பீட்டர் பாலுக்கும் திருமணம் ஆன போது பலரும் என்னை அவதூறாக திட்டி தீர்த்தனர். ஆனால் பீட்டர் பாலுக்காக உலகத்தையே நான் எதிரித்து நின்றேன். அவருக்காக பலரையும் நான் எதிர்த்து பேசி தற்போது தனி மரமாக நிற்கிறேன்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
பலரும் அவரை நான் பணத்திற்காக திருமணம் செய்து கொண்டதாக கூறுகின்றனர். அப்படி இருந்திருந்தால் அவரை பற்றிய அனைத்து தகவலையும் நான் முன்பே தெரிந்து வைத்திருப்பேன். இதுவரையிலும் அவருக்கு விவகாரத்து ஆகாத விஷயம் எனக்கு தெரியாது. அவர் தனியாக வாழ்ந்ததை பார்த்து தான் அவரை திருமணம் செய்து கொண்டேன். என்னிடம் இருக்கும் வரை அவர் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் இருந்தார். இந்த திருமணத்தால் ஏற்பட்ட பல சர்ச்சைகளில் அவர் குடிப்பழக்கத்தை தொடர்ந்துள்ளார்.
மேலும் எனக்கு தெரியாமல் அலுவலகத்திலேயே அவர் புகைப்பழக்கம் மற்றும் குடிப்பழத்தை தொடர்ந்துள்ளார். இது தெரிந்து அவரை இந்த பழக்கத்தில் இருந்து வெளிவருமாறு தொடர்ந்து கெஞ்சினேன். ஆனாலும் அவர் அதற்கு அடிமையானதால் அவரால் விட முடியவில்லை. இதனால் இவருக்கு நெஞ்சுவலியும் ஏற்பட்டது. இதற்கு பல லட்சங்களை நான் செலவு செய்தேன். வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் என் சொந்த சம்பாத்தியத்தில் வந்தது.
மேலும் எனக்கும் பீட்டர் பாலுக்கும் நடந்தது திருமணம் கிடையாது. அது வெறும் நிச்சயதார்த்தம் தான் என்றும் கூறியுள்ளார் வனிதா. வனிதாவின் இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இவருக்கு திருமணம் நடந்த வீடியோவை நாம் கண்கூடாக பார்த்தோம். மேலும் கிறிஸ்டியன் முறையில் இவருக்கு திருமணம் நடைபெற்றது. பல வீடீயோக்களில் முத்தம் வேறு கொடுத்து துளியும் நாகரீகமின்றி பதிவிட்டனர். இப்பொழுது பலரும் அவரை திட்டினாலும், அவரின் நிலையை நினைத்து சிலர் கவலைப்பட்டு வருகின்றனர்.