திருமணமான 4 மாதத்தில் பீட்டர் பாலை அடித்து துரத்திய வனிதா – இதுதான் காரணம்!!

1

தென்னிந்திய நடிகையும் பிக் பாஸ் நட்சத்திரமுமான வனிதா விஜய்குமார், பீட்டர் பால் என்பவரை ஜூன் 27 அன்று சென்னையில் திருமணம் செய்து கொண்டார். இது இவருக்கு 3வது திருமணம் என்பதால் பெரும் சர்ச்சை கிளம்பியது. கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற திருமணத்தின் போது பீட்டர், வனிதாவை முத்தமிடும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது. 4 மாதங்கள் கடந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து வனிதா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

வனிதா – பீட்டர் பால்:

கடந்த வாரம், பீட்டர் பாலின் பிறந்தநாளை கொண்டாட தனது குடும்பத்துடன் வனிதா கோவா சென்றிருந்தார். இது திருமணத்திற்குப் பிறகு பீட்டரின் முதல் பிறந்த நாள் என்பதால் வெகு விமரிசையாக கொண்டாடினர். வனிதாவின் முதல் இரண்டு மகள்களும் அவர்களுடன் கோவா பயணத்தில் இருந்தனர். கோவா கடற்கரையில் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலானது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

vanitha
vanitha & peter paul

இப்போது வணிதாவிற்கும், பீட்டருக்கும் இடையில் சில சண்டைகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பிரபல தமிழ் தயாரிப்பாளரும் அது உண்மை என கூறி பரபரப்பை கிளப்பினார். கோவாவில் குடிபோதையில் இருந்த பீட்டர் தவறாக நடந்து கொண்டதை அடுத்து இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் வனிதா, பீட்டரை கையில் குத்தியதுடன், அவரை வீட்டை விட்டு வெளியேறச் சொன்னார் என கூறப்படுகிறது.

தற்போது இது குறித்து வனிதா வெளியிட்ட பதிவில், கடந்த பல ஆண்டுகளாக வீடற்ற ஒரு நபருக்காக (பீட்டர் பால்) நான் ஒரு குடும்பத்தை உருவாக்கினேன். யார் குடும்பத்தையும் உடைக்கவில்லை. கொரோனா தொற்றுநோய் தொடங்கிய மோசமான காலங்களில் நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டோம். நான் எதையும் மறைக்கவில்லை. எனது வாழ்க்கையை நான் யாருக்கும் விளக்கத் தேவையில்லை. என்னால் அதனை கையாள முடியும்.

எனது துணைவரை அசிங்கப்படுத்துவதன் மூலமும் அனுதாபத்தைப் பெறுவதன் மூலமும் நான் பிரபலமடைய விரும்பவில்லை. தற்போது நான் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன் என பதிவிட்டு உள்ளார். இதிலிருந்து நடிகை பீட்டருடனான தனது திருமண வாழ்க்கையைப் பற்றியும், அதில் சிறிய பிரச்சனைகள் இருந்ததாகவும் சொல்லாமல் செல்கிறார் வனிதா என்பது தெரிய வருகிறது. அதையெல்லாம் தானே சரிசெய்ய முடியும் என்றும் வனிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

வனிதா விஜயகுமார் தனது 19வது வயதில் முதல் முறையாக திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் கணவர் தமிழ் நடிகர் ஆகாஷ். சில நாட்களில் இந்த ஜோடி பிரிந்தது. பின்னர் ஷாஷாம் ஆனந்த் ராஜன் என்ற தொழிலதிபரை மணந்தார். இந்த உறவும் விரைவில் பிரிந்தது. இதற்கிடையில், வனிதா ஒரு நடன இயக்குனருடன் நீண்ட காலமாக ஒன்றாக வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அவர் இப்போது பீட்டர் பாலுடன் மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். தற்போது இதுவும் பிரிவில் முடிந்துள்ளதால் மிகுந்த வேதனையில் வனிதா உள்ளதாக கூறப்படுகிறது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here