வனிதா விஜயகுமார் கடந்த வாரம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். மேலும் முத்த சர்ச்சை குறித்து பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்தை அடுத்து முத்த சர்ச்சை பற்றி வனிதா ட்வீட் செய்துள்ளார்.
வனிதா மீது விமர்சனம்..!
நடிகை வனிதா விஜயகுமார் கடந்த வாரம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டபோது இருவரும் முத்தம் கொடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளிவந்தன. அதை பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் ஒரு அந்தரங்கமான விஷயத்தை இப்படியா வெளியிடுவது என வனிதா மீது விமர்சனம் எழுந்தது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
வனிதா ட்வீட்..!
பின்னர் வனிதா சொந்தமாக வைத்திருக்கும் யு டியுப் சேனலில் தனது திருமணம் பற்றி சில விளக்கங்களைக் கொடுத்தார். இந்நிலையில் முத்த சர்ச்சை எழுந்ததை அடுத்து வனிதா இன்று ட்வீட்டரில் கணவர் பீட்டர் பால் நெற்றியில் முத்தமிடும் புகைப்படத்தைப்வெளியிட்டுள்ளார்.
Magalgalai Petra Appaakkalukku Mattum Thaan Theriyum
Mutham Kaamathil Serndhadhu Illai Endru…? pic.twitter.com/3QqUu41Ecv— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 2, 2020
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று என்ற தங்க மீன்கள் பட வசனத்தைப் பதிவிட்டுள்ளார்.