4வது முறையாக ‘காதலில் விழுந்த வனிதா’ – அவரே வெளியிட்ட பதிவு, ரசிகர்கள் ஷாக்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த வனிதா விஜயகுமார் தற்போது தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் மீண்டும் காதலில் விழுந்தேன் என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் மறுபடியுமா?? என ஷாக் ஆகியுள்ளனர்.

வனிதா விஜயக்குமார்

விஜய் நடித்த சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி திருமணத்திற்கு பிறகு பல சர்ச்சைகளை சிக்கியவர் வனிதா. முதல் கணவரை விவாகரத்து செய்ததும் தனது மகன் ஸ்ரீஹரி தன்னுடன் தான் இருக்க வேண்டும் என்று பல போராட்டங்கள் நடத்தினார் ஆனால் எதுவுமே கைகொடுக்கவில்லை. ஸ்ரீஹரி வணிதாவிடம் செல்ல மாட்டேன் என்று கூறியதால் தீர்ப்பு அவருக்கு எதிராக திரும்பியது.

மேலும் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அந்த திருமணமும் விவகாரத்தில் முடிந்தது. இதனால் தனியாகவே வாழ்ந்து வந்தார் வனிதா. இந்நிலையில் அவருக்கு பிக் பாஸ் மூலம் வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் படு பிரபலமானார். நாளடைவில் இவரை மக்களுக்கு பிடித்தும் போனது. அதன் பிறகு பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதற்கு மேல் அவரின் பிரிவும் பல சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இயல்பு வாழ்க்கைக்கு குறுகிய காலத்திலேயே திரும்பினார். பிக் பாஸ் ரிவியூ வனிதா தர்பார் என தனது கேரியரில் களமிறங்கினார். இந்நிலையில் வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘In Love Again’ என்று குறிப்பிட்டுள்ளார். அதன் கீழ் உமாரியாஸ் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் பலரும் மறுபடியுமா?? என்று கிண்டலடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here