விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்து வனிதா அதனை பற்றிய தனது கருத்துக்களை யூடூப் சேலில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது பிரபல மலையாள நடிகையான சகிலாவுடன் இணைந்து பிக் பாஸ் பற்றிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பிக் பாஸ்
தனது 3வது திருமணமும் பிரேக் அப்பில் முடிந்த கவலையில் அழுதபடி வீடியோ வெளியிட்டு இருந்த வனிதா, அடுத்த நாளே வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார். சொந்த வாழ்க்கையை வைத்து வியாபாரம் செய்ய வேண்டாம் என பலரும் அவரை கலாய்த்து வரும் நிலையில் எதையும் கண்டு கொள்ளாமல் வீடியோக்களை பதிவிட்டு வரும் வனிதா தற்போது பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலாவுடன் உரையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஷகிலா கன்னட பிக் பாஸில் கலந்து கொண்ட அனுபவத்தை வனிதாவிடம் பகிர்ந்துள்ளார். அதாவது அவர் 21 நாட்கள் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்தாராம். இது வரையிலும் தனது அனைத்து கோபங்களையும் அடக்கி வைத்திருந்த ஷகிலாவால் தன்னை பற்றி பின்னால் பேசுகின்றனர் என்று தெரிந்ததும் அங்கு இருக்க முடியாமல் கையை அறுத்துக் கொள்வதாக மிரட்டி வெறியேறியதாக கூறியுள்ளார்.
மேலும் தற்போது தமிழில் வெளியாகி இருக்கும் பிக் பாஸ் சீசன் 4 இல் உள்ளவர்களை பற்றி தனது கருத்தையும் கூறியுள்ளார். மேலும் வனிதா மேக்கப் பற்றி கூறியுள்ள ஷகிலா ‘பிரேக்கப் மேக்கப்பா’ என்று கிண்டலடித்துளார். மேலும் சுரேஷ் சக்கரவர்த்தி மக்கள் அனுதாபத்தை தேடுவதற்காக இப்படி செய்கிறார் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் அர்ச்சனா உடல் இழைப்பதற்காக உள்ளே சென்றதாக பேசி கிண்டலடித்துள்ளனர். ஷகிலாவிடம் பிக் பாஸ் வீட்டில் நீங்கள் யாருக்கு சப்போர்ட் செய்வீர்கள் என்று கேட்டதற்கு ஜித்தன் ரமேஷ் அவர்களை கூறியுள்ளார். ஆனால் நேற்று வரை கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட வனிதாவால் வனிதா இந்த வீடியோவில் இருந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார் என்பது தெரிகிறது. மேலும் ஷகிலா ‘2 அல்லது 3 னா பரவாயில்ல நமக்கு 10, 15 இருக்கே’ என்றும் வெளிப்படையாகவே கூறியுள்ளார். இந்த வீடியோவை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும் கல்யாணம் ஆனவளுக்கு ஒரு புருஷன் ஆகாதவளுக்கு லட்ச புருஷன் என்றும் கூறி கலாய்த்துளார் ஷகிலா. மேலும் இதனை சமாளிக்கும் விதமாக சொந்த வீடு இருக்கவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு பல வீடு என்று கூறி பச்சையாக சமாளித்துள்ளார்.