‘மக்களின் பாதுகாப்பு தான் எனக்கு முக்கியம்’ – அஜித் செய்த காரியத்தால் ரசிகர்கள் நெகிழ்ச்சி!!

0

நடிகர் அஜித் நடித்து பொங்கலுக்கு திரைக்கு வர தயாராக இருந்த படம் வலிமை. ஆனால் கொரோனா பரவலின் காரணமாக படம் தள்ளிப் போய்விட்டது. மேலும் அஜித் செய்த இந்த தியாகத்தை நினைத்து பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

வலிமை:

நேர் கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், காலா படத்தில் நடித்த நடிகை ஹிமா குரேஷி மற்றும் தெலுங்கு நடிகரான கார்த்திகேயா ஆகியோர் நடித்து உள்ளனர். மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து உள்ளார். மேலும் இந்த படம் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது.

தற்போது கொரோனா தொற்றின் காரணமாக தமிழக அரசு திரையரங்குகளில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி அளித்து உள்ளது. அதனால் படக்குழு பட வெளியிடை தள்ளி வைத்து உள்ளது.மேலும் தற்போது படத்தை ரிலீஸ் செய்தலும் கண்டிப்பாக வசூல் ரீதியாக பாதிப்பு வரும் என்ற நோக்கத்தோடு படத்தை தள்ளி வைத்து விட்டனர் படக்குழுவினர்.

ஆனால் நடிகர் அஜித் குமார் நினைத்து இருந்தால் தமிழக முதல்வரிடம் சென்று திரையரங்குகளில் 100% அனுமதி பெற்று இருக்க முடியும். ஆனால் இவர் அதை செய்யவில்லை. மேலும் இவர் படம் திரைக்கு வருவதை விட மக்களின் நலன் தான் முக்கியம் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அதை கேள்வி பட்ட அவரின் ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here