கொரோனா பரவல் எதிரொலி – பக்தர்களின்றி 23 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த வைத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!!

0

நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா நோய்பரவல் காரணமாக இன்று மயிலாடுதுறையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று வைத்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது.

வைத்தீஸ்வரர் கோவில்:

நாட்டில் கடந்த ஆண்டு வீசிய கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையை விட தற்போது வீசப்படும் தொற்றின் இரண்டாவது அலை மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக அனைத்து பகுதிகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதில் கோவில் போன்ற மதசார்ந்த விழாவிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக தமிழகத்தில் மதுரையில் ஆண்டு தோறும் கோலாகலமாக நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கு தடை பிறப்பிக்கப்பட்டது. அதேபோல் மயிலாதுறையில் உள்ள வைத்தீஸ்வரர் திருக்கோவிலில் இன்று கும்பாபிஷேகம் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழா கொரோனா பரவலுக்கு மத்தியில் மிக பாதுகாப்பாக நடத்தப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி – அதிர்ச்சியில் மக்கள்!!

மேலும் மயிலாடுதுறையில் இன்று முழு ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 23 ஆண்டுகளுக்கு பின்பு இந்த கோவிலின் கும்பாபிஷேக திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. நீதிமன்றத்தின் உத்தரவின்படி கோவில் உள்ளே மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கும்பாபிஷேகம் காரணமாக சீர்காழி, மயிலாடுதுறை, சிதம்பரம் ஆகிய பகுதிகளில் சாலை போக்குவரத்து மாற்றுப்பாதையில் அமைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here