வைரமுத்து மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை அடுக்கி வருபவர் பாடகி சின்மயி. இவர்களின் பிரச்சனை இன்று வரை ஓய்ந்த பாடு இல்லை. தற்போது மேலும் ஒரு குற்றச்சாட்டை அவர் வைரமுத்து மீது சின்மயி சுமத்தி உள்ளார். வைரமுத்து வாய்ப்பு தருவதாக கூறி டிஸ்கஷன் என தனியாக அழைத்து சென்று கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாக தெரிவித்து உள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கவிபேரரசு என்று புகழின் உச்சியில் இருக்கும் வைரமுத்து மீது சின்மயி தொடர்ந்து பாலியல் ரீதியாக பல புகார்களை தெரிவித்த வண்ணம் உள்ளார். இவர்களுக்கிடையே உள்ள இந்த பிரச்னை நேற்று இன்று இல்லை பல காலமாக உள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் கூட வைரமுத்து தான் வாங்கியிருந்த விருதையும் திருப்பி கொடுத்தார்.இவர் கூறும் இவற்றை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்க முடியவில்லை. இந்நிலையில் நான் நல்லவன் என்பதை எப்படியும் நிரூபித்து தீருவேன் என அவர் ஒரு பக்கம் தனது தரப்பை கூறி வருகிறார்.
தற்போது சின்மயி கூறியதாவது, ஒரு முறை வைரமுத்து வாய்ப்புத் தருகிறேன் எனக் கூறி சின்மயியை அவர் வீட்டிற்கு அழைத்துள்ளார் சின்மயி அவர்கள் அம்மாவுடன் அங்கு சென்றுள்ளார். வைரமுத்து மனைவி மற்றும் சின்மயி அம்மா இருவரையும் வெளியே உட்கார வைத்துவிட்டு, டிஸ்கஷன் என கூறி சின்மயியை உள்ளே அழைத்துச் சென்றுள்ளார் வைரமுத்து. அப்போது திடீரென சின்மயியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விட்டாராம்.
இதை சற்றும் எதிர்பார்க்காத சின்மயி உடனடியாக அந்த இடத்தை விட்டு கீழே இறங்கி வந்து தன்னுடைய அம்மாவை கூட்டி கொண்டு வேக வேகமாக காரில் புறப்பட்டுச் சென்று விட்டாராம். அதன் பிறகு சில முறை வைரமுத்து பாடல் வாய்ப்பு தருவதாக அழைத்துள்ளார். முடிந்த வரை அவருடன் எப்போதும் நெருக்கமாக இருக்க மாட்டேன் எனவும், முக்கியமாக அவர் தனிமையில் இருக்கும்போது அவரை சந்திக்க மாட்டேன் என கூறி சின்மயி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இவர்களின் பிரச்சனை எப்போது தான் முடிவுக்கு வருமோ தெரியவில்லை.
Facebook =>Like செய்ய கிளிக் பண்ணுங்க!!