தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வைகை அணையில் அளவுக்கு மீறி நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அதனால் முதல் கட்ட வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 68.08 அடியாக உள்ளது. ஏற்கனவே முதற் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தற்போது மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.