தமிழகத்தில் பருவமழை கொட்டி தீர்த்ததால் வைகை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதன் அடிப்படையில், தற்போது வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வைகை அணை திறப்பு:
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாலும், தேனி மாவட்டத்திலும் கனமழை கொட்டியதாலும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வைகை அணை நிரம்பியுள்ளது. இந்த தென்மேற்கு பருவமழையால் வைகை அணை கடந்த மாதம் 13ந்தேதி முழுக்கொள்ளளவாக நிர்ணயம் செய்யப்பட்ட 69 அடியை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் இன்று முதல் (செப்.,28) திறந்து விட தமிழக உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.,,ஒரே நாளில் 22 பேர் பலி., அதிர்ச்சி அறிக்கை!!
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாயில் நாள்தோறும் நொடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பகுதிகளில் உள்ள 2284.86 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வைகை அணை திறக்கப்பட்டு உள்ளதால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.