“எதுக்குடா நான் சரிப்பட்டு வரமாட்டேன் சொல்லுங்கடா”., வடிவேலு காமெடியின் பல ஆண்டு ரகசியத்தை உடைத்த இயக்குனர்!!

0
"எதுக்குடா நான் சரிப்பட்டு வரமாட்டேன் சொல்லுங்கடா"., வடிவேலு காமெடியின் பல ஆண்டு ரகசியத்தை உடைத்த இயக்குனர்!!

தமிழ் சினிமாவில் திடீரென அறிமுகமாகும் கதாபாத்திரம் பல காலங்கள் கடந்தாலும் தனது தடத்தை பதிவு செய்திருப்பார்கள். அப்படி ஒரு தாக்கத்தை அங்காடித்தெரு திரைப்படத்தில் இயக்குனர் வெங்கடேஷ் ஏற்படுத்திருப்பார். இவர் 1995ம் ஆண்டு மகா பிரபு படத்தை இயக்கியதன் மூலம் கோலிவுட் உலகில் அடியெடுத்து வைத்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பின்னர் செல்வா, நிலவே வா, பகவதி, தம், குத்து என பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஆனால், இவர் இயக்கிய அர்ஜுன் நடித்த வாத்தியார் திரைப்படத்தில் இடம்பெற்ற வடிவேலு காமெடியை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அதாவது, வடிவேலுவிடம் “நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட டா” என சிங்கமுத்து கொந்தளித்திருப்பார். இந்த காட்சி இன்றளவும் மறக்க முடியாத நிகழ்வாகவே உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்-க்கு டப் கொடுக்கும் புது சீரியல்.,ஹீரோ யார் தெரியுமா? தரமான சம்பவம் ரெடி மக்களே!!

இதுபற்றி இயக்குனர் வெங்கடேஷ் கூறுகையில், இந்த காட்சியை படமாக்கும் போது நடிகர் வடிவேலு அரைமனதாக ஒப்புக்கொண்டார். ஆனால் ஸ்கிரிப்டில் இல்லாத வசனமாக “காரணம் தெரியலன்னா மனசு உறுத்துமே” என வடிவேலு on the spotல் பேசி அசத்தி இருப்பார். இந்த கேள்விக்கு விடை கிடைக்காமல் இருப்பது தான் இந்த காமெடியின் வெற்றி. எனவே அந்த ரகசியம் வெளியே வராமல் இருப்பதே நல்லது.”. என மீண்டும் சஸ்பென்ஸ் உடன் உரையை முடித்துள்ளார். இதனால் காண்டான ரசிகர்கள் “நீங்க தாண்டா சரிப்பட்டு வரமாட்டீங்க” என ஊடகங்களில் கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here