பகையை மறந்து வடிவேலுவுடன் இணைய துடிக்கும் சிங்கமுத்து – ஏற்றுக்கொள்வாரா வைகை புயல்?

0

வடிவேலு சிங்கமுத்து காமெடிக்கு சிரிக்காத ஆளே இருக்க முடியாது. பின்னர் ஒரு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ஒன்றாக நடிக்காமல் பகையை வளர்த்துக்கொண்டு விலகி சென்றனர். தற்போது மீண்டும் இருவரை வைத்து படம் இயக்கபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கமுத்து – வடிவேலு:

இறுபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் இருந்து வரும் வடிவேலு சில ஆண்டுகளாக சினிமா வாசமே படாமல் மொத்தமாக விலகினார். இதற்கு பிறகு மீண்டும் தற்போது வடிவேலு திரையுலகில் கால் பதித்துள்ளார். இவர் தற்போது கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்னும் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் கௌண்டமணி செந்திலுக்கு பிறகு அதிகமான நகைச்சுவையால் கவர்ந்தவர்கள் என்றால் அது வடிவேலு சிங்கமுத்து தான். அந்த அளவுக்கு இருவருக்கும் நல்ல நகைச்சுவை ஒற்றுமை இருந்தது. ஆனால் நில பிரச்னை காரணமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பல ஆண்டுகளாக விரோதிகளாகவே இருந்தனர். தற்போது இருவரையும் வைத்து மீண்டும் படம் இயக்க இயக்குனர்கள் திட்டம் போட்டு கொண்டிருக்கின்றனர். சிங்கமுத்து பகையை மறந்து வடிவேலுவுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் வடிவேலு ஒப்புக்கொள்வாரா என்பது சந்தேகமே.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here