தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான வைகைப்புயல் வடிவேலு, செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இது நமக்கு தேவையே இல்லை என அதிரடி பதில் ஒன்றை தெரிவித்துள்ளார்.
வடிவேலு பதில் :
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. கொஞ்ச காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், சமீபத்தில் எலி, கத்தி சண்டை ஆகிய படங்களின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து தற்போது பல முன்னணி ஹீரோக்களுடன் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இவர் சில தினங்களுக்கு முன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது நிருபர் கேட்ட கேள்விக்கு, அரசியலுக்கு வரவேண்டிய தேவை இல்லை என்றும், சினிமாவில் இருந்து கொண்டே மக்களுக்கு நல்லது செய்யலாம் என்றும் தெரிவித்தார்.
Big Boss 6 : இந்த செல்லத்துக்கு ஒரு சீட்ட போட்டுங்க., வர்றது கன்பார்ம்? முக்கிய பிரபலம் உறுதி!!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அரசியலில் இறங்கியதால் தனது கேரியர் முற்றிலும் நாசமாகி போனதால், அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தற்போது வடிவேலு மாமன்னன், சந்திரமுகி 2, நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.