வனிதாவை விமர்சித்து வந்த சூர்யா தேவி கைது – நள்ளிரவில் போலீசார் அதிரடி!!

0

நடிகை வனிதா திருமணம் குறித்து யூ டியூப் இல் கடுமையாக விமர்சித்து வந்த சூர்யா தேவி என்பவரை வடபழனி போலீசார் நேற்று நள்ளிரவு அதிரடியாக கைது செய்தனர். வனிதா திருமண விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில் போலீசாரின் நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா தேவி கைது:

நடிகை வனிதா, டிவி சீரியல் தயாரிப்பாளர் பீட்டர் பால் என்பவரை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். இது வனிதாவுக்கு 4வது திருமணம் ஆகும். இது குறித்து பீட்டர் பாலின் முதல் மனைவி தன்னிடம் விவாகரத்து பெறாமல் பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக புகார் அளித்தார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய பேசும் பொருளாக உருவெடுத்தது. இந்நிலையில் வனிதா திருமணம் குறித்து சூர்யா தேவி என்பவர் யூ டியூப் இல் கடுமையாக விமர்சித்து வந்தார். இது குறித்து வனிதா வடபழனி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதில் வனிதா மற்றும் சூர்யா தேவி இருவரையும் போலீசார் நேரில் அழைத்து விசாரித்தனர். வனிதா தன்னைப் பற்றி அவதூறாக பேசியது மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக சூர்யா தேவி மீது புகார் அளித்து இருந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு வடபழனி மகளிர் போலீசார் சூர்யா தேவியை அதிரடியாக கைது செய்தனர். கொலை மிரட்டல் மற்றும் ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here