விரைவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி சோதனை… கோவோவாக்ஸ் தடுப்பூசி நிறுவனம் தகவல்!!!

0

புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அடுத்த மாதம் அதாவது ஜூலையில் குழந்தைகளுக்கு நோவோவாக்ஸ் தடுப்பூசி செலுத்தி மருத்துவ சோதனை செய்ய உள்ளதாக தற்போது தெரிவித்து உள்ளது.

அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மறுசீரமைப்பு நானோ துகள்கள் புரத அடிப்படையிலான தடுப்பூசி நோவாவாக்ஸ். இது இந்தியாவில் கோவாவாக்ஸ் என்று பெயர் சுடப்பட்டு உள்ளது. இதற்கான 3-ம் கட்ட சோதனை அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் நடத்தப்பட்டு வெளியான முடிவில் இந்த தடுப்பூசி தொற்றை தடுப்பதில் 90.4 சதவீதம் திறன் கொண்டது என கண்டறியப்பட்டு உள்ளது.மேலும் இந்தியாவில் செப்டம்பர் மாதத்திற்குள் நோவாவாக்ஸுடன் கைகோர்த்து சீரம் நிறுவனம் கோவோவாக்ஸ் தடுப்பூசியை அறிமுகப்படுத்த தீர்மானித்து உள்ளது.

நோவோவாக்ஸின்  சோதனை முடிவுகளை அறிவித்த சில நாட்களுக்கு பிறகு, குழந்தைகள் மீது செலுத்திச் சோதனை செய்வதை எவ்வித தாமதமும் இன்றி தொடங்குமாறு சீரம் நிறுவனத்திடம் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே சீரம் நிறுவனம் தொடங்கியுள்ளது. உரிய நேரத்தில் அந்நிறுவனம் குழந்தைகள் மீது பரிசோதனையை தொடங்கும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். மேலும் இந்த கோவோவாக்ஸ் தடுப்பூசியை பாதுகாக்க வெறும் 2-8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் போதுமானது.

இந்தியாவில் 13 முதல் 14 கோடி பேர்,12 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும்  என டாக்டர் பால் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இவர்களுக்கு செலுத்த  25 முதல் 26 கோடி டோஸ் தடுப்பூசிகள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here