தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு – உச்ச நீதிமன்றத்திடம் தமிழக அரசு கூறிய பதில்!!!

0
தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு - உச்ச நீதிமன்றத்திடம் தமிழக அரசு கூறிய பதில்!!!
தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு - உச்ச நீதிமன்றத்திடம் தமிழக அரசு கூறிய பதில்!!!

கொரோனா நோய் தொற்றை எதிர்த்து போராட மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன, ஆனால் மத்திய அரசு தமிழக்த்திற்கு மட்டும் தடுப்பூசிகளை மிக குறைந்த அளவில் மட்டுமே வழங்கி வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தடுப்பூசி தட்டுப்பாடு தமிழக அரசு விளக்கம்…

கொரோனா 2 வது அலை நோய் தொற்றின் பரவல் அதிகரித்து வந்தது, ஆனால் மாநில அரசும் மத்திய அரசும் சேர்ந்து போராடி இந்த நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அரசு 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அனுமதி அளித்தது. ஆனால் தமிழகத்தில் பலரும் தடுப்பூசியை செலுத்தி கொள்ள கொஞ்சம் அச்சப்பட்டு வந்தனர். தடுப்பூசியினால் பக்க விளைவுகள் அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படுமேன்று அஞ்சினர். பின் அரசு அளித்த விழிப்புணர்வாலும் தைரியத்தாலும் சில நாட்களுக்கு பின் மக்கள் அனைவரும் மிக ஆர்வத்துடன் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள முன் வந்தனர்,

தடுப்பூசி தட்டுப்பாடு தமிழக அரசு விளக்கம்
தடுப்பூசி தட்டுப்பாடு தமிழக அரசு விளக்கம்

ஆனால் தமிழக்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இருந்து வருவதால் தமிழக அரசிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டது. அதற்கு தமிழக அரசு மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசியை வழங்கி வருகிறது. ஆனால் தமிழகத்திற்கு மட்டும் தாமதமாகவும் குறைந்த எண்ணிக்கை கொண்ட தடுப்பூசிகளை வழங்கி வருவதாக தகவல் தெரிவித்தது. மேலும் தடுப்பூசியை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்றும் கூறியது. தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை பல மாவட்டங்களில் இருந்து வருகிறது. சென்னையில் தடுப்பூசி பற்றாக்குறையினால் சில நாட்களாக தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மக்கள் மிக மணவருத்தத்துடன் இருக்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here