கொரோனாவுக்கு எதிரான ஒரு தடுப்பூசியாவது செலுத்தியிருந்தால் தான் இனி கொடைக்கானல் சுற்றுலா தளத்திற்கு செல்ல அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதிரடி உத்தரவு:
தமிழகத்தில் மிக சிறந்த சுற்றுலாத் தலமான “மலைகளின் இளவரசி “என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு பல இடங்களில் இருந்து பயணிகள் வந்த வண்ணம் இருப்பர். கடந்த ஏப்ரல் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கத்தில் மூடப்பட்ட இந்த சுற்றுலா தளங்கள் அண்மையில் தான் திறக்கப்பட்டன. இதனை அடுத்து, குணா குகை, தூண் பாறை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்கள் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது இங்கு வரும் பயணிகளுக்கு முக்கிய கட்டுப்பாடு ஒன்றை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது, கொரோனாவுக்கான ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே இங்கு வர அனுமதிக்க படுவார்கள் என்றும், அதிகாரிகள் இந்த தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை சரிபார்த்த பின்னரே பயணிகளை இங்கு அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டபட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்