வாரிசு படத்தில் பிசியாக நடித்து வரும் “ராஷ்மிகா மந்தனா”, மனம் உடைந்து ஒரு சில விஷயங்ககளை ஷேர் செய்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஷ்மிகா:
கடந்த 2018ம் ஆண்டு தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்த படம் தெலுங்கில் வெளியாகி இருந்தாலும், தமிழிலும் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது. இதையடுத்து ராஷ்மிகா, தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ‘சுல்தான்’ என்ற படத்தில் அறிமுகமானார்.
ஆத்தாடி.., என்ன ஒரு லுக்.., என்ன ஒரு கிளாமரு.., ரசிகர்களை கிறங்கடித்த கனிகா!!
இந்நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தனா தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது . மேலும் இந்த படத்தின் ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ என்ற பாடல் நேற்று முன்தினம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதாவது அனைவரின் வாட்சப் ஸ்டேட்ஸில் இந்த பாடல் தான் இப்போது ஒலிக்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் ராஷ்மிகா,”நான் சினிமாவிற்கு வந்ததிலிருந்தே என்னை சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்வது, நான் சொல்லாத விஷயங்களை வைரலாக்குவது உள்ளிட்டவைகள் என் மனதை அதிகம் காயப்படுத்தி உள்ளது , இருப்பினும் உங்கள் சந்தோஷத்திற்காக நான் கடுமையாக உழைப்பேன்” என்று கூறியுள்ளார். இதை பார்த்த இணையவாசிகள் நேஷனல் கிருஷ்க்கு வந்த சோதனையா இது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.