நாளை மறுநாள் வெளியாக இருக்கும் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களின் டிக்கெட் விலை அதிகமாக வசூலிப்பதாக புகார் ஏழுந்துள்ளது.
வாரிசு – துணிவு:
தற்போதைய சூழ்நிலையில் மக்களுக்கு என்டர்டைன்மெண்ட் செய்தியாக இருந்து வருவது வாரிசு – துணிவு திரைப்படங்கள் தான். குறிப்பாக தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருபவர்கள் நடிகர் அஜித்-விஜய். அவர்கள் படம் திரைக்கு வந்தால் போதும் அது சூப்பர் டூப்பர் ஹிட் லிஸ்ட் தான். அதுமட்டுமின்றி தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்ற ஒன்றை கொடுக்காமல் அவர்களின் படங்கள் வெற்றிகரமாக ஓடுகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதன்படி தற்போது இருவரும் நடித்து முடித்த வாரிசு மற்றும் துணிவு வருகிற பொங்கல் நாளை ஸ்பெஷலாக மாற்ற ஜனவரி 11ம் தேதி திரைக்கு வருகிறது. மேலும் விஜய்யின் வாரிசு திரைப்படம் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு மற்றும் துணிவு படத்தின் முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கும் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி நெருங்கியதால், தற்போது ப்ரீ புக்கிங் மிக தீவிரமாக நடந்து வருகிறது.
இனிமே இந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப கூடாது., தனியார் சேனல்களுக்கு அரசு உத்தரவு!!
இந்நிலையில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களின் டிக்கெட் விலையை குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வாரிசு – துணிவு திரைப்படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் படத்தோட டிக்கெட் அதிக விலைக்கு சென்னையில் தியேட்டர் உரிமையாளர்கள் விற்கிறார்கள் என்று தேவராஜன் என்பவர் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதற்கு முன்னர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் அதிக விலைக்கு டிக்கெட்கள் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.