கொரோனா வைரஸ் ஓர் உயிரினம், அது வாழ்வதற்கு அதற்கு உரிமை உண்டு – முன்னாள் முதலமைச்சர் கருத்தினால் பரபரப்பு!!

0

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று முதல் அலை இரண்டாம் அலை என்று தொடர்ந்து தாக்கி வரும் நிலையில் இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ்:

இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று உயிர் சேதம் பொருளாதார சேதம் என மிக கடுமையாக பாதித்து வருகிறது. இதன் காரணமாக நாளுக்கு நாள் உலகம் முழுவதும் உள்ள மக்களின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் இருந்து முழுவதுமாக குணமடைய உலக நாடுகள் அனைத்தும் மிக கடுமையாக போராடி வருகிறது. இருந்தும் அதில் இருந்து மீண்ட பாடில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனாவின் முதல் அலையை விட தற்போது ஏற்படும் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் தான் மிக அதிகமான அளவில் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இதுகுறித்து உத்தரகண்ட் மாநில முன்னாள் முதலமைச்சரான திரிவேந்திர சிங் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதத்தில் 216 கோடி தடுப்பூசிகள் -நிதி ஆயோக் அறிக்கை!!

அதன்படி அவர் கூறியதாவது, கொரோனா வைரஸ் ஓர் உயிரினம், அது வாழ்வதற்கு அதற்கு உரிமை உண்டு. ஆனால் நாம் என்னமோ, புத்திசாலிகள் என்று கருதி அதனை விரட்ட நினைக்கிறோம். இதன் காரணமாகவே அது தொடர்ந்து உருமாறி வருகிறது என்று கூறியுள்ளார். தற்போது இவரது கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here