ஊரடங்கில் புதிய தளர்வுகள்: திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை கலந்துகொள்ளலாம்…

0

உத்தரகாண்ட் மாநில அரசு தற்போது அம்மாநிலத்தில் அமலில் இருக்கும் ஊரடங்கை ஜூன் 22 ஆம் தேதி வரை நீடித்துள்ளது. மேலும் திருமணம், இறப்பு ஆகிய அத்தியாவசிய நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை கலந்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது.

தற்போது மாநிலத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் நிலையில், அதில் சில மாற்றங்கள் செய்து, மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளில் மிக முக்கியமானதாக, கரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருப்பவர்கள் சமோலி, ருத்ரபிரயாக் மற்றும் உத்தரக்காசி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் முறையே பத்ரிநாத், கேதார்நாத் மற்றும் கங்கோத்ரி – யமுனோத்ரி ஆகிய பகுதிகளுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் திருமணம், இறப்பு நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை கலந்து கொள்ளலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மார்க்கெட், வாரத்தில் 3 நாட்கள் இயங்கும் அதேபோல ஸ்வீட் கடைகள் வாரத்தில் 5 நாட்கள் வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பொதுமுடக்கம் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாகவும், இந்த காலத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here