அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளையும், நலத்திட்டங்களையும் மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றனர். அதில் ஒன்றாக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன்படி மத்திய அரசானது கடந்த ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை மார்ச் மாதத்தில் உயர்த்துவதாக அறிவித்தனர். இதை தொடர்ந்து ராஜஸ்தான், அசாம் மாநிலங்களில் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டது. சமீபத்தில் கூட தமிழகத்திலும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 38% இருந்து 42% வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இப்படி அனைத்து மாநிலங்களிலும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்திலும் அகவிலைப்படியை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து வெளியான தகவலில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி “அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளித்ததாக சொல்லப்படுகிறது.
அதன்படி உயர்த்தப்பட்டால் உத்தரகாண்ட் ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38% இருந்து 42% உயர்த்தப்படும். அப்படி அகவிலைப்படியை உயர்த்தினால் சுமார் 3 லட்சம் ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசு ஊழியர்களின் சம்பளம் 38,000 இருந்து 42,000 ஆக உயரும் என குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தான் தெரிகிறது.